செய்திகள் மலேசியா
கிழக்கு மலேசியாவில் வானிலை எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா), சரவாக், சபா, லாபுவானில், இன்று இரவு 11 மணி வரை, இடியுடன் கூடிய மழை, கனமழை, பலத்த காற்றிற்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மெட் மலேசியா பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சரவாக்கில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், சிபு (செலாங்காவ்), முக்கா (டாலட், முக்கா), காபிட், சோங், பிந்துலு, மிரி (சுபிஸ்), லிம்பாங் ஆகிய பகுதிகளில் இந்த வானிலை எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
லாபுவான் கூட்டாட்சிப் பிரதேசத்தையும், சபாவின் உட்பகுதி (கோலா பென்யூ, பியூஃபோர்ட், நபாவான்), மேற்கு கடற்கரை, தாவாவ், சண்டாக்கான் (தெலுப்பிட், கினபாத்தாங்கான், பெலுரான்), கூடாட் (கோத்தா மருது, பிட்டாஸ்) ஆகிய பகுதிகளையும் இதே வானிலை எச்சரிக்கை உள்ளடக்கியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர்களை (மிமீ/மணி) மீறும் மழைத் தீவிரத்துடன் இடியுடன் கூடிய மழை நெருங்கி வருவதற்கான அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் அறிகுறிகள் இருக்கும்போது எச்சரிக்கை வெளியிடப்படுகிறது.
"இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். இது, ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணி நேரத்திற்கும் மிகாமல் செல்லுபடியாகும்" என்று அது கூறியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 6:18 pm
காரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்: ஜோர்ஜ்டவுனில் பரபரப்பு
May 30, 2026, 4:08 pm
ஃபஹ்மிக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை: ரபிசி ரம்லி
May 30, 2026, 4:07 pm
தடம் மாறிய 4 எல்ஆர்டி ரயில் பெட்டிகள் ஆய்வுக்காக கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன
May 30, 2026, 3:23 pm
சுங்கை பூலோவில் தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் அழிந்தன
May 30, 2026, 3:17 pm
