நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஒத்துழைப்பைப் பேணுவதில் அம்னோ தொடர்ந்து உறுதியாக உள்ளது: ஜாஹித்

கோலாலம்பூர்:

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஒத்துழைப்பைப் பேணுவதில் அம்னோ தொடர்ந்து உறுதியாக உள்ளது.

அக்கட்சியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி இதனை கூறினார்.

அம்னோ தனது கட்சியை வலுப்படுத்தவும், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பை தொடர்ந்து பராமரிக்கவும் உறுதி கொண்டுள்ளது.

சவால்களை எதிர்கொள்ளும் கட்சிக்கு ஒற்றுமையே பலமாக இருந்தது இதற்குக் காரணம்.

நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டது என்று ஜாஹித் கூறினார்.

வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொட்டு பேசிய அஹ்மத் ஜாஹித், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் அம்னோவின் கவனம் உள்ளது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset