செய்திகள் மலேசியா
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் 15ஆவது இடத்தில் உள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் 500 பதிப்பானது தி ராயல் இஸ்லாமிய வியூக ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டது.
இது ஜோர்டானின் அம்மானைத் தலைமையிடமாகக் கொண்ட ராயல் அல் அல்-பைட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இஸ்லாமிய சிந்தனையால் நிதியளிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆராய்ச்சி மையமாகும்.
தலைவர்கள், அரசியல்வாதிகள் பிரிவில் டத்தோஶ்ரீ அன்வார் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் ஜோர்டானின் மன்னர் அப்துல்லாவை முதல் இடத்தில் உள்ளார்.
அதைத் தொடர்ந்து டார் அல் முஸ்தபாயின் இயக்குநரும் உலாமாவுமான தாரிம் ஷேக் அல்-ஹபீப் உமர் பின் ஹஃபிஸ், கட்டார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சயீத் அலி கமேனி, சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் ஆகியோரும் அப்பட்டியலில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm