நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது

கூலாய்:

விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக நிகந்த அடிதடி சமவத்தில் தொடர்புடைய 7 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கூலாய் மாவட்ட போலிஸ் தலைவர் தான் செங் லீ இதனை தெரிவித்தார்.

இங்குள்ள செனாய் சர்வதேச விமான நிலையம் அருகே சாலையோரத்தில் மற்றொரு நபரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை போலிசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை, ஸ்குடாய், ஜொகூர் பாருவைச் சுற்றி நடத்தப்பட்ட சோதனையில் 25 முதல் 40 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சரவாக்கின் மிரி விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு இடத்தின் இருக்கைக்காக ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக  அமைந்துள்ளது.

இச்சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர்கள் கைதானர்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset