நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு

ஷாஆலம்:

நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது.

நாட்டில் சர்ச்சையாக குளோபல் இக்வானுடன் தொடர்புடைய இரண்டு பெண் உட்பட மூவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் குளோபல் இக்வானின் நிதி அதிகாரியும் அடங்குவார்.

கைதானவர்களின் தடுப்பு காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் அவர்களுக்கான தடுப்பு காவலை நீட்டிக்க மனு சமர்பிக்கப்பட்டது.

இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி முகமத் ரெட்சா அவர்களுக்கான தடுப்பு காவலை நீட்டித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset