நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை: ஃபஹ்மி

புத்ராஜெயா:

பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்தப்படுவது குறித்து பிரதமர் அண்மையில் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் இன்னும் ஆய்வுக் கட்டத்தில் தான் உள்ளது.

ஏனெனில் பல கொள்கை ரீதியான விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் பணக்காரர்களின் குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை.

அது இன்னும் விவாத கட்டத்தில் உள்ளது என்று அவர் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஃபஹ்மி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset