நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் இலக்குகள் வெற்றி பெற பாடுபடுவேன்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

மஇகா சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற கட்சியின் தேசிய தலைவரின் இலக்குகள் வெற்றி பெற பாடுபடுவேன்.

மஇகாவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

மஇகாவின் 2024-2027ஆம் ஆண்டுகளுக்கான பொருளாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.

என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கியுள்ள கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு எனது நன்றி.

அதே வேளையில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கும் எனது நன்றி.

கட்சியின் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்விரு தலைவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்.

குறிப்பாக கட்சி சொந்த காலில் நிற்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரையும் நம்பி இருக்கக் கூடாது என்பதுதான் தேசிய தலைவரின் முக்கிய இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் தான் மூன்று கட்டிடங்களைக் கொண்ட பிரம்மாண்ட மஇகா கட்டிடத்தை கட்டும் முயற்சியில் தேசியத் தலைவர் இறங்கியுள்ளார்.

இதைத் தவிர்த்து மேலும் பல திட்டங்களையும் அவர் கொண்டுள்ளார்.

இத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற கட்சியின் தலைமைத்துவத்திற்கு எப்போதும் நான் உறுதுணையாக இருப்பேன்.

தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இலக்குகள் வெற்றி பெற பாடுபடுவேன்.

குறிப்பாக கட்சியின் நிதி வளம் வலுவாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்  என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset