நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் சில பகுதிகளில் அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை: AIR SELANGOR அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூரில் அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளது. பாசார் செனியில் உள்ள நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதனை சீர் செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று AIR SELANGOR விளக்கமளித்தது 

பராமரிப்பு பணி அக்டோபர் 8, செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் அக்டோபர் 9ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணி வரை நடைபெறும் என்பதோடு பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றவுடன் நீர் விநியோகம்  கட்டங்கட்டமாக செயலாக்கம் காணும் என்று அந்நிறுவனம் கூறியது 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் AIR SELANGOR நிறுவனத்திற்குச் சொந்தமான நீர் தாங்கிகள் கொண்ட லாரிகள் சென்று தற்காலிக நீர் விநியோகத்திற்கு உதவும் 

இந்த விவகாரம் குறித்து அண்மைய தகவல்களுக்குப் பொதுமக்கள் AIR SELANGOR நிறுவனத்தின் சமூக ஊடகங்களைப் பின் தொடரலாம் என்று AIR SELANGOR ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset