நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிராந்திய, உலகளாவிய அறைகூவல்களை மலேசியா இலகுவாக எடுத்துக்கொள்ளாது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

பிராந்திய, உலகளாவிய அறைகூவல்களை மலேசியா இலகுவாக எடுத்துக் கொள்ளாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசாங்கம் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. அதன் சாதனைகளில் திருப்தி அடையாது.

மாறாக பிராந்திய, உலகளாவிய அறைகூவல்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.

நாட்டின் கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான முயற்சிகள் ரிங்கிட்டின் வலுவூட்டப்பட்ட செயல்திறன், முதலீட்டின் எழுச்சி, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை ஆகியவற்றால் பலன்களை அளித்தாலும் இது முக்கியமானது.

அதன்படி, நாடு சாதித்துள்ள சாதனைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தனது பாராட்டுகளை பிரதமர் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset