நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டப்படுவதை மடானி அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

நாட்டின் செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டபடுவதை மடானி அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அக்டோபர் 18-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நாட்டிலுள்ள தொழில் துறையினர் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் கருத்துகளையும் கேட்க அரசாங்கம் தொடர்ச்சியான கருத்து பரிமாற்ற அமர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

அமர்வில், வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குறைந்த செம்பனை உற்பத்தி விகிதம் உட்பட பல விஷயங்கள் தொட்டு கவனம் செலுத்தப்பட்டது.

கூடுதலாக, நாட்டின் செம்பனை தொழிலின் உயிர்வாழ்வை உறுதி செய்யும் திட்டத்தில் அதன் தொடர்பான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் விவாதிக்கப்பட்டன என்று அன்வார் தனது X பக்கத்தில் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset