நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத்தின் வார விடுமுறை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றம்:ஜொகூர் இடைக்கால சுல்தான் அறிவிப்பு 

ஜொகூர் பாரு:

அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி முதல் ஜொகூர் மாநிலத்தின் வார விடுமுறை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் அறிவித்துள்ளார். 

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இதற்கு இணக்கம் தெரிவித்த பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக துங்கு இஸ்மாயில் தெரிவித்தார். 

இந்த மாற்றம் குறித்து ஜொகூர் மாநில இஸ்லாமிய மதத் துறை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி ஆகியோரின் கருத்துகளும் பெறப்பட்டுள்ளதை துங்கு இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், அனைத்துத் தனியார் நிறுவனங்களும், அரசு மற்றும் தொடர்புடைய தரப்பினரும் முஸ்லிம் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்ற போதுமான நேரத்தையும் வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset