நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வாரயிறுதி விடுமுறை மாற்றம்  2.5 மில்லியன் மக்களை பாதிக்கும்: டத்தோ ஓன் ஹபிஸ் காசி 

ஜொகூர் பாரு: 

ஜொகூரில் வாரயிறுதி விடுமுறை சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்படுவது 587,343 பள்ளி மாணவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் சுமார் 2.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்தார். 

மீதமுள்ள 1.94 மில்லியன் பணியாளர்கள் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களைக் கொண்டுள்ளனர்.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் முடிவுக்கு இணங்க இது குறித்து அனைத்து அம்சங்களிலிருந்தும் ஆராய்வோம் என்று அவர் கூறினார்.

மேலும், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துவதற்கு பொருத்தமான நேரம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றார் அவர். 

வார இறுதி நாட்களைச் சீரமைப்பது, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான கால அட்டவணைச் சிக்கல்களைல் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாற்றம் குடும்ப உறூப்பினர்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிட வழிவகுக்கும். 

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜொகூரின் வாரஇறுதி நாள்கள் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என்று அனுசரிக்கப்படுகின்றன.

முஸ்லிம்கள் தங்களுடைய தொழுகைகளைச் செய்ய ஏதுவாக அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஜொகூர் இஸ்லாமியச் சமய மன்றம் முன்வைத்த கருத்துகளை ஆராய்ந்த பின் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி முதல் ஜொகூர் மாநிலத்தின் வார விடுமுறை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் அறிவித்துள்ளார். 

பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இதற்கு இணக்கம் தெரிவித்த பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக துங்கு இஸ்மாயில் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset