செய்திகள் உலகம்
யேமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
புது டெல்லி:
யேமன் நாட்டில் ஹவூதி போராளிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஹவூதிக்களின் ராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனின் துறைமுக நகரான ஹொடைடாவில் உள்ள விமான நிலையம், கத்தீப் பகுதியில் உள்ள ராணுவத் தளங்கள் மீது 7 குண்டுகளும், சனா நகரில் உள்ள செய்யானா பகுதியில் 4 குண்டுகளும் தாமர் மாகாணத்தில் 2 குண்டுகளும் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானங்கள், போர்க் கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
யேமன் நாட்டில் நுழைந்த அமெரிக்க ராணுவ டிரோனையும், அமெரிக்க போர்க் கப்பல்களின் மீதான தாக்குதலையும் ஹவூதிகள் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 3:00 pm
ஹைட்டியில் தொடரும் கும்பல் வன்முறைகள்: 70-க்கும் மேற்பட்டோர் பலி
March 31, 2026, 12:56 pm
இணையக் கட்டுப்பாட்டை மீறிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தோனேசியா அரசு கடும் எச்சரிக்கை
March 31, 2026, 11:03 am
ஈரான் - அமெரிக்கப் போர் பதற்றம்: வணிகங்களைக் காக்க 100 கோடி திர்ஹம் ஒதுக்கிய துபாய் அரசு
March 31, 2026, 10:40 am
ஆயிரக்கணக்கான அமெரிக்க வான்படை வீரர்கள் மேற்காசியா வர தொடங்கினர்
March 31, 2026, 10:37 am
டீசலுக்காக சடலத்துடன் வந்த நபர்: தாய்லாந்து எரிபொருள் தட்டுப்பாட்டின் உச்சக்கட்டம்
March 30, 2026, 7:17 pm
வளைகுடா போர் எதிரொலி: விளக்குளை அணைக்கும்படி வங்காளதேச அரசாங்கம் உத்தரவு
March 30, 2026, 4:55 pm
தூசி படிந்த அறைகளும் தற்காலிக பதுங்கு குழிகளும்: அழுத்தத்தில் வாழும் இஸ்ரேல் மக்கள்
March 30, 2026, 4:24 pm
