நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்

 நீலாய்:

மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளை கட்டுவதே Ehsan  மேம்பாட்டுக் குழுமத்தின்  முதன்மை இலக்காகும்.

அக் குழுமத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குநருமான டத்தோ பி வி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

வீடமைப்பு கட்டுமானத் துறையில் Ehsan குழுமம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வீடுகளை ஏசான் குழுமம் கட்டியுள்ளது.

குறிப்பாக ஏசான் குழுமத்தின் வீடமைப்பு திட்டத்தின் வீடுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகிவிடும்.

அதற்கு வசதிகள் நிறைந்த இட அமைப்பு, தரம் ஆகியவை முக்கிய அம்சமாக இருந்தாலும், மக்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை கட்டுவது தான் ஏசான் குழுமத்தின் முக்கிய இலக்காகும்.

இந்த இலக்கு தான் ஏசான் குழுமத்தின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

நீலாயில் ஏசான் விடுரி எனும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மாதிரி வீட்டின் அறிமுக விழாவில் டத்தோ அப்துல் ஹமித் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset