செய்திகள் உலகம்
மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்
புது டெல்லி:
டியாகோ கார்சியா தீவை உள்பட சாகோஸ் தீவுப் பகுதியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
டியாகோ கார்சியா தீவை அமெரிக்கா தனது விமானப் படை தளமாக பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ - பிசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகோஸ் தீவின் உரிமைகளை மோரீஷஸிடம் ஒப்படைத்ததாக பிரிட்டன் தெரிவித்தது.
சாகோஸ் தீவுப் பகுதிகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மொரீஷியஸின் கோரிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
பிரிட்டன் - மொரீஷியஸ் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 4, 2024, 12:10 pm
லெபனான், காசா, ஏமன், சிரியா ஆகிய நாடுகள் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் பன்முனைத் தாக்குதல்
October 4, 2024, 12:06 pm
கலிபோர்னியாவில் எச்5 பறவைக் காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது
October 3, 2024, 3:38 pm
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் மருமகன் பலி
October 3, 2024, 1:33 pm
இலங்கை – இஸ்ரேல் அனைத்து விமான சேவைகளும் இரத்து
October 3, 2024, 11:20 am
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறைத் தண்டனை
October 3, 2024, 11:15 am
பைடனின் மோசமான நிர்வாகம் 3ஆம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு
October 3, 2024, 11:14 am
இஸ்ரேலின் சக்திவாய்ந்த மொசாட் தலைமையகத்தை தாக்கிய ஈரான்
October 2, 2024, 10:09 pm