செய்திகள் உலகம்
மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்
புது டெல்லி:
டியாகோ கார்சியா தீவை உள்பட சாகோஸ் தீவுப் பகுதியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
டியாகோ கார்சியா தீவை அமெரிக்கா தனது விமானப் படை தளமாக பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ - பிசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகோஸ் தீவின் உரிமைகளை மோரீஷஸிடம் ஒப்படைத்ததாக பிரிட்டன் தெரிவித்தது.
சாகோஸ் தீவுப் பகுதிகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மொரீஷியஸின் கோரிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
பிரிட்டன் - மொரீஷியஸ் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
