செய்திகள் உலகம்
மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்
புது டெல்லி:
டியாகோ கார்சியா தீவை உள்பட சாகோஸ் தீவுப் பகுதியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
டியாகோ கார்சியா தீவை அமெரிக்கா தனது விமானப் படை தளமாக பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ - பிசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகோஸ் தீவின் உரிமைகளை மோரீஷஸிடம் ஒப்படைத்ததாக பிரிட்டன் தெரிவித்தது.
சாகோஸ் தீவுப் பகுதிகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மொரீஷியஸின் கோரிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
பிரிட்டன் - மொரீஷியஸ் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
