செய்திகள் உலகம்
மொரீஷியஸ் சாகோஸ் தீவை ஒப்படைத்த பிரிட்டன்
புது டெல்லி:
டியாகோ கார்சியா தீவை உள்பட சாகோஸ் தீவுப் பகுதியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
டியாகோ கார்சியா தீவை அமெரிக்கா தனது விமானப் படை தளமாக பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ - பிசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், உலகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகோஸ் தீவின் உரிமைகளை மோரீஷஸிடம் ஒப்படைத்ததாக பிரிட்டன் தெரிவித்தது.
சாகோஸ் தீவுப் பகுதிகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மொரீஷியஸின் கோரிக்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
பிரிட்டன் - மொரீஷியஸ் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 6:15 pm
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஹந்தாவைரஸ்: இதுவரை 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
May 11, 2026, 10:53 am
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
