
செய்திகள் உலகம்
தாய்லாந்து பள்ளிப் பேருந்து தீயில் அழிந்த சம்பவம்: பேருந்து ஓட்டுநர் கைது
பேங்காக்:
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் மாணவர்களும் ஆசிரியர்களும் சென்ற பேருந்தில் தீப்பிடித்துக்கொண்ட சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர்.
தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்களை அடையாளம் காண குடும்பத்தார் பேங்காக்கிற்குச் சென்ற நிலையில், பேருந்து ஓட்டுநரைக் போலிசார் கைது செய்தனர்.
பள்ளிச் சுற்றுலாவுக்காக, பேங்காக்கிற்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தாய் தானி மாநிலத்திலிருந்து அயுத்தயா, நொந்தாபுரி மாநிலங்களுக்குச் சென்ற அப்பேருந்தில் ஆறு ஆசிரியர்களும் பாலர் பள்ளி மாணவர்கள் முதல் 13, 14 வயது வரையுள்ள 39 மாணவர்களும் இருந்தனர்.
நெடுஞ்சாலையில் சென்றபோது பேருந்தின் சக்கரங்களில் ஒன்று வெடித்ததால் சாலைத்தடுப்பில் பேருந்து மோதி தீப்பிடித்தது.
தீ வேகமாகப் பரவியதால் பலராலும் வெளியேற முடியவில்லை.
இந்நிலையில், தீவிபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் உத்தரவிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 3:34 pm
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
March 19, 2025, 12:35 pm
விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்
March 19, 2025, 12:10 pm
பாகிஸ்தானில் சீனாவின் மோசடி கால் சென்டர்: பொது மக்கள் கொள்ளை
March 18, 2025, 3:26 pm
விமானம் தண்ணீருக்குள் விழுந்தது: 7 பேர் மரணம்
March 18, 2025, 12:04 pm
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
March 18, 2025, 11:43 am
பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது
March 18, 2025, 11:14 am