செய்திகள் மலேசியா
மைடின் பேரங்காடியின் தீபாவளி கொண்டாட்டம்: துணையமைச்சர் சரஸ்வதி தொடக்கி வைத்தார்
சுபாங்:
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மைடின் பேரங்காடியின் ஏற்பாட்டில் நடைபெற்றபிரகாசமான தீபாவளி கொண்டாட்டத்தை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பல இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கலாச்சாரம் வலுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது போன்று கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என செனட்டர் சரஸ்வதி தமது உரையில் கூறினார்.
இன பேதமின்றி மைடின் பேரங்கடி சமூகத்துடன் அணுக்கமான தொடர்பை ஏற்படுத்தி வருகிறது. எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும், அந்த கொண்டாட்டத்திற்கு மைடின் பேரங்கடி முன்னுரிமை வழங்கி வருகிறது.
மொத்த, சிறிய விற்பனை பேரங்காடி குழுமமான மைடின் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு ஏற்ப அனைத்து கொண்டாட்டங்களுக்கும் மைடின் பேரங்கடி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மைடின் பேரங்கடி நடத்தி வரும் இது போன்று சமூக நலன் நிகழ்ச்சிகளுக்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய இந்த கொண்டாட்டத்தில் 50 குடும்பங்களுக்கு மைடின் பேரங்காடியின் ஏற்பாட்டில் உணவுக் கூடைகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:44 pm
பெர்கேசோவின் iLINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
August 17, 2026, 5:12 pm
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
August 17, 2026, 5:02 pm
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:52 pm
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
August 17, 2026, 3:38 pm
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம்: தொழிற்துறை வளாகம் தற்காலிகமாக மூடல்
August 17, 2026, 1:01 pm
ஆலயத்தின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது குறித்து 3 புகார்கள் பெறப்பட்டன: போலிஸ்
August 17, 2026, 12:04 pm
