நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவின் நிலஅதிர்வினால் மலேசியாவிற்கு எந்த அபாயமும் இல்லை: மலேசிய வானிலை ஆய்வுத் துறை

கோலாலம்பூர்: 

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளின் பகுதியில் இன்று காலை 10.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தெற்கு 6.4, கிழக்கு 131.5 என்ற நிலஅளவுகளில் மையம்கொண்டு, 78 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவான இந்த அதிர்வு, அம்போன் நகரத்திலிருந்து தென்கிழக்காக அமைந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மலேசிய கடற்பரப்புக்கு சுனாமி அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், சமூக ஊடகங்கள் வழியாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset