நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையில் இறந்து கிடந்தது புலி அல்ல பொம்மை: வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா விளக்கம்

கோல சிலாங்கூர்:

சாலையில் இறந்து கிடந்தது புலி அல்ல பொம்மை என்று சிலாங்கூர் மாநில வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா விளக்கம் தந்துள்ளது.

நேற்று இங்குள்ள பெஸ்தாரி ஜெயா கம்போங் சுங்கை தராவில் வாகனம் மோதியதில் புலி இறந்து விட்டதாக வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலானது.

புலி இறந்து கிடந்தது என்று வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை.

மாறாக வாகனத்தில் இருந்து விழுந்த புலி பொம்மை தான் அது என்று இவ்விலாகாவின் இயக்குநர் வான் முகமட் அடிப் இதனை கூறினார்.

நேற்று இரவு 11 மணியளவில் நடந்த சம்பவத்தைக் காட்டும் சமூக ஊடகங்களில் வைரலான சில படங்களை நாங்கள் பார்த்தோம்.

இதன் அடிப்படையில் அது புலி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset