செய்திகள் மலேசியா
3 ஆயிரம் வேலை வாய்ப்புகளுடன் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி: பாப்பாராயுடு
ஷாஆலம்:
மூவாயிரம் வேலை வாய்ப்புகளுடன் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் அடுத்த வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் அக்டோபர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை கிள்ளான் டேவான் ஹம்சாவில் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன.
வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் நேரடியாக இக்கண்காட்சிக்கு வலராம்.
குறிப்பாக சுய விவரங்களுடன் வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் தொழில் கண்காட்சியும் உள்ளது.
இதில் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று பாப்பாராயுடு கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2024, 5:00 pm
டத்தோஶ்ரீ அன்வார் நீண்டகாலம் பிரதமராக பதவி வகிப்பார்: கிட் சியாங் கணிப்பு
October 1, 2024, 4:24 pm
சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளியை பிரதமர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்
October 1, 2024, 3:51 pm
இ.பி.எஃப். சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு சம்பளக் குறைவே காரணம்: முஹம்மத் ஜூக்கி அலி
October 1, 2024, 3:30 pm
சாலையில் இறந்து கிடந்தது புலி அல்ல பொம்மை: வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா இலாகா விளக்கம்
October 1, 2024, 3:29 pm
அரபு நன்கொடையை நஜீப் அரசிலுக்காக பயன்படுத்தினார்; தனக்காக அல்ல: ஷாபி
October 1, 2024, 3:16 pm