
செய்திகள் இந்தியா
நவராத்திரி கர்பா நடன நிகழ்ச்சிக்கு அநாகரிக உடைகள் அணிந்து வரக்கூடாது: மாநகரக் காவல் ஆணையர் ஜி.எஸ்.மாலிக்
அகமதாபாத்:
குஜராத்தில் குறிப்பாக அகமதாபாத் மாநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்க உள்ளன. இதுகுறித்து அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் ஜி.எஸ்.மாலிக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடன நிகழச்சிகளை நடத்த விரும்புவோர், மாகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதி பெற வேண்டும். உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெற முடியாது.
நிகழ்ச்சியின் நுழைவாயிலில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள், கையடக்க மெட்டல் டிடெக்டர்களை பொருத்த வேண்டும்.
மது அருந்தி வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
நுழைவு வாயிலில் ஆண் மற்றும் பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் கர்பா நடன நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அநாகரிகமான உடைகளை அணிந்து வரக்கூடாது.
அநாகரிகமான உடை அணிந்து வந்துள்ளார்களா, மது அருந்தி வந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் எவையெல்லாம் அநாகரிக உடைகள் என்பதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm