நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தால் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஜாஹித் ஹமிடி

குளுவாங்:

இந்திய சமுதாயத்திற்கு துரோகம் இழைக்க வேண்டாம். அவர்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

இந்த நாட்டில் வாழும் இந்திய மக்கள் மிகவும் விசுவாசமானவர்கள். இதை நான் பல இடங்களில் உணர்ந்துள்ளேன். குறிப்பாக என் தொகுதியான பாகான் டத்தோவில் உணர்ந்தேன்.

அங்குள்ள மக்களுக்கு நான் உண்மையாக உள்ளேன். அவர்களுக்கு எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதை தான் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைனுக்கு நான் நினைவுறுத்துகிறேன்.

மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இந்திய மக்களுடனான மாபெரும் ஒற்றுமை விழாவில் அதிகமாக மக்கள் திரண்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த ஆதரவை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய சேவையை நீங்கள் வழங்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது.

அந்த துரோகத்தை அவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset