நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு ஜசெக மாநில ஆட்சியை காக்க வேண்டும் ; 25 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை பொறுப்பை விட்டுக் கொடுத்த சாவ் வலியுறுத்தினார்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு மாநில ஆட்சியை மாநில ஜசெக தொடர்ந்து தற்காக்க வேண்டும். இதில் எந்த பின்னடைவும் இருக்கக் கூடாது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை பொறுப்பை விட்டுக் கொடுத்த மாநில முதலமைச்சர் சாவ் கோன்  இயோவ் இதனை வலியுறுத்தினார்.

பினாங்கு ஜசெக தலைவராக 25 ஆண்டுகள் பதவி வகித்து புதிய தலைமையை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்.

அதே வேளையில் மாநில அரசியலில் ஜசெக கட்சி தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டும்.
 
அதற்காக  தேர்தலில் தலைவர், அணியை உறுப்பினர்கள் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

கட்சியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணியால் வழிநடத்தப்பட்டு, மக்களை மதிக்க வேண்டும்.  விஷயங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 

பாயான் லெப்பாஸ் செத்தியா ஸ்பைஸ் அரங்கில் நடைபெற்ற பினாங்கு ஜசெக மாநாட்டில் பேசிய அவர் இதனை கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset