நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 29 பேருக்கு 1 முதல் 7 நாள் தடுப்புக் காவல்

ஷாஆலம்:

குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 29 பேருக்கு 1 முதல் 7 நாள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.

ஒப் குளோபல் நடவடிக்கையின் கீழ் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.  19 முதல் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் 1 முதல் 7 நாட்கள் வரை தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.

விசாரணைக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கான தடுப்பு காவலை துணை அரசுப் பதிவாளர் எம்.டி. சுப்ரி ஹாஷிம் ஏற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர்கள் ஷாஆலம், சுபாங்ஜெயா, பெட்டாலிங் மாவட்ட போலிஸ் தலைமையகங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset