நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியின் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியை ஏமாற்ற மாட்டார்கள்: அப்துல் அஜீஸ்

குளுவாங்:

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியின் இந்திய வாக்காளர்கள் தேசிய முன்னணியை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்கள்.

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ பங்ளிமா அப்துல் அஜீஸ் இதனை கூறினார்.

கெடா மாநிலத்தில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை சந்தித்து விட்டு கிட்டத்தட்ட 7 மணி நேரம் காரில் பயணம் செய்து மக்கோத்தா வந்துள்ளேன்.

இங்குள்ள இந்திய சகோதர சகோதரிகளை சந்திக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

மக்கோத்தா சட்டமன்ற தொகுதியில் 5,000த்திற்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

முடிந்த வரை இந்த வாக்காளர்களை நான் சந்தித்து உள்ளேன்.

அவர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்திய மக்கள் என்றும் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டார்கள்.

ஆகையால், வரும் தேர்தலில் அவர்கள் நிச்சயம் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்த ஆதரவின் அடிப்படையில் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹுசைன் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியை பெறுவார்.

மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இந்திய மக்களுடனான மாபெரும் ஒற்றுமை விழாவில் பேசிய டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset