நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைதி, ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: செனட்டர் சரஸ்வதி

கோலாலம்பூர்:

நாட்டில் அமைதி, ஒற்றுமைக்கு நாம் அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும். ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை வலியுறுத்தினார்.

தீவிரவாதம், கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சை அதிகரித்து வரும் இந்த உலகத்தில், புரிந்துணர்வு மற்றும் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே மதிக்கும் தன்மை அவசியம்.

இன்று இங்கு ஐக்கிய நாடுகளின் அனைத்து உலகை அமைதி தினத்தை முன்னிட்டு மதங்களுக்கு இடையேயான இசை மட்டும் நடன விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார். 

இந்த விழாவில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங்கின் உரையை செனட்டர் சரஸ்வதி வாசித்தார். 

மதங்களுக்கு இடையேயான கலந்துரையாடல், ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். 

இது பல இனங்களுக்கு இடையே ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும் என்றார் அவர். 

எல்லா சமூகத்தின் சிறப்புத் தன்மைகளும் மதிக்கப்பட வேண்டும். மலேசியர்களாக நம்மை ஒன்றிணைக்க பல்லின ஒற்றுமை ஒரு பாலமாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

நம்மிடையே வேறுபாடுகள் இருந்த போதிலும் மலேசியர்களாக நாம் ஒன்றிணைகிறோம்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு தொடங்கிய மடானி நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏற்ப, தங்களின் புரிந்துணர்வை வலுப்பெறச் செய்ய மலேசியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 

மேலும் அனைத்து சமூகங்களுக்கு இடையே நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது அன்றாட நடவடிக்கைகளின்வழி அமைதியும் ஒற்றுமையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset