செய்திகள் மலேசியா
இசைவழி தமிழ்மொழியை உலகமெங்கும் பரவச் செய்யும் அற்புதமான இசை நிகழ்ச்சி தமிழ் ஓசை: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
இசைவழி தமிழ்மொழியை உலகமெங்கும் பரவச் செய்யும் அற்புதமான இசை நிகழ்ச்சி தமிழ் ஓசை.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இசைக்கு மயங்காத இதயம் இல்லை. தமிழோடு இசையையும் கலந்து இரசிக்கும் போது, அதற்கு ஈடு இல்லை.
குமரேஷ் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் படைப்பாக அமைந்த தமிழ் ஓசை நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இசைவழி தமிழ்மொழியை உலகமெங்கும் பரவச் செய்யும் அற்புதமான இசை நிகழ்ச்சி தமிழ் ஓசை.
நவீன இசையில் சங்கத் தமிழை எப்படி சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கடத்த முடியும் என்பதைக் காண முடிந்தது.
அதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்வுகள் பரவலாக நடத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 12:55 pm
GISBH நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை: அப்பாவி உறுப்பினர்களைப் பாதிக்கக்கூடாது: பாஸ் வலியுறுத்தல்
September 22, 2024, 12:50 pm
புத்ராஜெயாவில் GISBH க்குச் சொந்தமான நான்கு வணிகபகுதிகள் மூடப்பட்டது
September 22, 2024, 12:21 pm
இந்திய குத்தகையாளர்களிடையே மின்-விலைப்பட்டியல் குறித்த விழிப்புணர்வு அவசியம்: ஆனந்தன்
September 22, 2024, 10:37 am
கெடா மாநிலத்தில் மோசமடையும் வெள்ளம்: 9,000 பேர் பாதிப்பு
September 22, 2024, 10:23 am
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:11 pm