நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடா மாநிலத்தில் மோசமடையும் வெள்ளம்: 9,000 பேர் பாதிப்பு 

அலோர் ஸ்டார்: 

கெடா மாநிலத்தில் வெள்ளப்பேரிடர் மோசமடைந்துள்ளது. அதீத கனமழை காரணமாகவும் மூன்று ஆறுகளில் நீர் மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9058 ஆக பதிவு செய்யப்பட்டது 

கொடாவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் 44 வெள்ள நிவாரண மையங்களில் 2,962 குடும்பங்கள் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. 

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது 1698 குடும்பங்களைச் சேர்ந்த 5099 பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள 18 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இன்று காலை 7 மணி நிலவரப்படி கோத்தா ஸ்டாரில் உள்ள மூன்று ஆறுகளின் நீர்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக கெடா மாநில JPS தகவல் வெளியிட்டது

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset