செய்திகள் மலேசியா
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
பெய்ஜிங்:
கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று பயணத்தை நிறைவு செய்து விட்டு தாயகத்திற்குப் புறப்பட்டார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை ஏற்றி வந்த சிறப்பு விமானம் காலை 9.28 மணிக்கு பெய்ஜிங் கேப்பிடல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், சீனாவுக்கான மலேசிய தூதர் டத்தோ நோர்மான் முஹம்மத், வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் மாமன்னரை வழியனுப்பி வைத்தனர்.
புறப்படுவதற்கு முன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு சீனா நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
17ஆவது மாமன்னராக பதவியேற்ற சுல்தான் இப்ராஹிம் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவிற்குப் பயணமாகி இருந்தார். சீன நாட்டு அதிபரான XI JINPING உடனும் அவர் சந்திப்பு நடத்தினார் குறிப்பிடத்தக்கது
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 12:55 pm
GISBH நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை: அப்பாவி உறுப்பினர்களைப் பாதிக்கக்கூடாது: பாஸ் வலியுறுத்தல்
September 22, 2024, 12:50 pm
புத்ராஜெயாவில் GISBH க்குச் சொந்தமான நான்கு வணிகபகுதிகள் மூடப்பட்டது
September 22, 2024, 12:21 pm
இந்திய குத்தகையாளர்களிடையே மின்-விலைப்பட்டியல் குறித்த விழிப்புணர்வு அவசியம்: ஆனந்தன்
September 22, 2024, 11:50 am
இசைவழி தமிழ்மொழியை உலகமெங்கும் பரவச் செய்யும் அற்புதமான இசை நிகழ்ச்சி தமிழ் ஓசை: டத்தோஸ்ரீ சரவணன்
September 22, 2024, 10:37 am
கெடா மாநிலத்தில் மோசமடையும் வெள்ளம்: 9,000 பேர் பாதிப்பு
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:11 pm