நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 R பிரச்சினைக்குள் செல்லாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்: பிரதமர்

கோலாலம்பூர்: 

நாட்டில் 3ஆர் பிரச்சினை தீவிரமடையாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்.

பிரதமர் டத்தோஶ்ரீ அனவார் இப்ராஹிம் இதனை கூறினார்.

3ஆர் எனப்படும் மதம், இனம், ராஜா  தொடர்பான பிரச்சினைகளைத் தொடுவது உட்பட எந்தவொரு கல்வியாளருக்கும் பேசுவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது.

அதே வேளையில் அது  வரம்புகளுக்கு அப்பால் செல்லாமல் இருக்க வேண்டும்.

இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ  ஜம்ரி அப்துல் காதிரிடம் வலியுறுத்தப்பட்டதாக பிரதமர் கூறினார்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளருக்கு பேசுவதற்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. ஆனால் அது எல்லை மீறக்க் கூடாது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset