செய்திகள் மலேசியா
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நேரில் சந்தித்தார்: 13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்குவதாக அறிவித்தார்
ஜித்ரா:
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.
கெடாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
இன்று மாலை 4 மணி நிலவரப்படி 8,022 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் 40 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கெடா வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிட்டார்.
அதே வேளையில் திதி காஜா தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்திற்கு அவர் சென்றார்.
அங்கு தங்கியிருக்கும் மக்களை அவர் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் கெடா வெள்ள நிவாரணத்திற்காக மதானி அரசாங்கம் 13 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்குவதாக அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 10:37 am
கெடா மாநிலத்தில் மோசமடையும் வெள்ளம்: 9,000 பேர் பாதிப்பு
September 22, 2024, 10:23 am
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:11 pm
3 R பிரச்சினைக்குள் செல்லாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்: பிரதமர்
September 21, 2024, 8:07 pm
சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாமன்னர் கண்ணீர் விட்டார்
September 21, 2024, 8:01 pm
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 21, 2024, 7:36 pm
சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 7:02 pm