நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாமன்னர் கண்ணீர் விட்டார்

பெய்ஜிங்:

சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கண்ணீர் விட்டார்.

அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு மாமன்னர் சீனா சென்றுள்ளார்.

இப்பயணத்தின் முக்கிய அங்கமாக அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

அப்போது கல்லீரல் புற்றுநோயுடன் போராடி 2015இல் இறந்த தனது மகன் குறித்து சீன அதிபர் ஆறுதல் கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரின்  தெற்கு மாநிலமான குவாங்டாங்கில் உள்ள சன் யாட் சென் பல்கலைக்கழக மருத்துவமனையில் மறைந்த இளவரசருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியதற்காக சீனாவுக்கு மாமன்னர் நன்றி தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset