செய்திகள் மலேசியா
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
கோலாலம்பூர்:
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் 16 பள்ளிகள், 500 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.
சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வழங்கினார்.
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியின்கீழ் இருக்கும் 5 பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.
டியூசன் ரக்யாத் திட்டத்தின்கீழ் இந்நிதி அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
11 பள்ளிகளுக்கு 55 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதியை பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதே வேளையில் இப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் ஆதரவுடன் கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி நிதிகள் வழங்கப்பட்டது.
இந்த கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்வு இன்று கோத்தா டாமான்சாராவில் நடைபெற்றது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் இந்நிகழ்வுக்கு தலைமையேற்று இந்த நிதியை எடுத்து வழங்கினார்.
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரிய உறுப்பினரும் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான யோங் சஃபூரா ஒத்மான், அறவாரியத்தின் தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால் அப்துல் கனி, துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
பி40 மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த உதவிகளை பேங்க் ரக்யாட் அறவாரியம் செய்து வருகிறது.
வரும் காலங்களில் இன்னும் பரவலாக இந்த உதவிகளை அறவாரியம் செய்யும் என்று யோங் சஃபூரா ஒத்மான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2024, 10:23 am
சீனாவில் அலுவல் பயணம் நிறைவு செய்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தாயகத்திற்குப் புறப்பட்டார்
September 22, 2024, 9:20 am
இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மற்றொரு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 8:11 pm
3 R பிரச்சினைக்குள் செல்லாத வரை கல்வியாளர்கள் சுதந்திரமாக விவாதிக்கலாம்: பிரதமர்
September 21, 2024, 8:07 pm
சீன அதிபருடனான சந்திப்பின் போது மறைந்த மகனை நினைத்து மாமன்னர் கண்ணீர் விட்டார்
September 21, 2024, 8:01 pm
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் 100% இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 21, 2024, 7:36 pm
சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 21, 2024, 6:25 pm