நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்  கூறினார்.

சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இத் தொகுதி மக்களின் நலத் திட்டங்களின் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

குறிப்பாக என் தொகுதி மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பல திட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன்.

இதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தான் பேங்க் ரக்யாத் அறவாரியத்துடன்  இணைந்து 16 பள்ளிகளுக்கும் 500 மாணவர்களுக்கும் கல்வி உதவி நிதிகள் வழங்கப்பட்டது.

இம்முறை கோத்தா டாமான்சாராவில் இந்நிதிகள் வழங்கப்பட்டது.

அடுத்து பாயாஜெராஸ் வட்டார மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும்.

மாணவர்கள் கல்வி பயில வசதியின்மை ஒரு தடையாக இருக்கக் கூடாது.

இதன் அடிப்படையில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகிறது என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset