செய்திகள் உலகம்
விமானப் பயணிகளின் காது, மூக்கிலிருந்து வழிந்த ரத்தம்: மன்னிப்பு கோரிய டெல்டா விமான நிறுவனம்
வாஷிங்டன்:
விமானத்தினுள் காற்றழுத்தம் குறைந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் டெல்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
அச் சம்பவத்தின்போது பயணிகளின் பலரது காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
செப்டம்பர் 15ஆம் தேதி சால்ட் லேக் சிட்டியிலிருந்து போர்ட்லேண்டிற்கு அவ்விமானம் சென்றபோது நிகழ்ந்த இச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை விசாரித்து வருகிறது.
மொத்தம் 140 பயணிகளுடன் பறந்த அவ்விமானம் 10,000 அடிக்குமேல் பறக்க முடியவில்லை என்று டெல்டா நிறுவனம், மின்னஞ்சல் மூலம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
விமானம் தரையிறங்கியதும் பத்துப் பேரை மருத்துவப் பணியாளர்கள் பரிசோதித்ததாக அல்லது சிகிச்சை அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜேசி பர்சர் என்ற பெண் பயணி, தன் கழுத்தில் கத்தியால் குத்தியது போன்ற வலியை உணர்ந்ததாக கேஎஸ்எல் தொலைக்காட்சியிடம் கூறினார்.
என் காதைப் பிடித்துக்கொண்டேன். பின்னர் என் கையைப் பார்த்தபோது அதில் ரத்தம் காணப்பட்டது என்றார் ஜேசி.
விமானத்தின் உயிர்வாயு முகக்கவசங்கள் செயல்படவில்லை எனக் கூறப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 3:17 pm
இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை
September 20, 2024, 12:17 pm
Cathay Pacific விமான இயந்திரத்தில் தீ
September 20, 2024, 11:19 am
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
September 20, 2024, 11:08 am
லெபனானில் வெடித்த கருவிகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம்
September 19, 2024, 4:46 pm
18 மணி நேரம் வேலை செய்து மோட்டார் சைக்கிளில் தூங்கிய உணவு விநியோகிப்பாளர் மரணம்
September 19, 2024, 1:01 pm
2026ஆம் ஆண்டு முதல் பறக்கும் டாக்ஸி சேவை: துபாயில் அறிமுகமாகிறது
September 19, 2024, 12:58 pm
பால்டிமோர் பால விபத்து - US$100 மில்லியன் இழப்பீடு கேட்டு அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்துள்ளது
September 19, 2024, 12:10 pm