நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

18 மணி நேரம் வேலை செய்து மோட்டார் சைக்கிளில் தூங்கிய உணவு விநியோகிப்பாளர் மரணம்

பெய்ஜிங்:

கிட்டத்தட்ட 18 மணி நேரம் வேலை செய்து களைப்பாக மோட்டார் சைக்கிளில் தூங்கிய உணவு விநியோகிப்பாளர் மரணமடைந்தார்.

தென் சீனா போர்னிங் போஸ்ட் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த நபரின் மரணம் சீனா முழுவதும் உள்ள இ-ஹைய்லிங் ரைடர்களின் நலன், சட்ட உரிமைகள் பற்றிய விவாதத்தைத் தூண்டியது.

கிழக்கு சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள ஹாங்சூ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.

செப்டம்பர் 6 அன்று இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

55 வயதுடைய யுவான் என அடையாளம் காணப்பட்ட உணவு விநியோகம் செய்பவர், நீண்ட நாள் வேலைக்குப் பிறகு, 

மின்சார மோட்டார் சைக்கிளில் ஓய்வெடுக்கும் போது தூக்கத்தில் இறந்துவிட்டதாக வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

அவர் கிட்டத்தட்ட 18 மணி நேரம் இடைவிடாது வேலை செய்ததால் இம்மரணம் ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset