நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிக மதிப்புள்ள துறைகளை மேம்படுத்துவதற்கான தெளிவான பார்வையையும் திசையையும் சரவா பிரிமியர் கொண்டுள்ளார்: ஸ்டீவன் சிம்

கூச்சிங்:

அதிக மதிப்புள்ள துறைகளை மேம்படுத்துவதற்கான தெளிவான பார்வையையும் திசையையும்  சரவா பிரிமியர் டத்தோ பெதாங்கி டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி கொண்டுள்ளார்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

சரவா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது சரவா பிரிமியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்திப்பின் போது அதிக மதிப்புள்ள துறைகளை மேம்படுத்துவதற்கான தெளிவான பார்வையையும் திசையையும்  அவர் கொண்டிருந்ததை நான் தெரிந்து கொண்டேன்.

சம்பந்தப்பட்ட துறைகளில் மலேசிய திறமைகளை வளர்ப்பதற்கு திறன் பயிற்சியை ஈடுபடுத்துவது அவசியம்.

குறிப்பாக அதிக ஆற்றல் கொண்ட மதிப்புமிக்க முதலீட்டை பெற் விரும்பினால், நம்மிடம் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மிகவும் திறமையான தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் சரவா அரசாங்கத்தின் கல்வி நிறுவனங்களில் வழக்கமான தொழில்நுட்பம், திவேட் மனித மூலதனத்தை உருவாக்கும் வலிமையைக் கொண்டிருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

இதற்கு மனிதவள அமைச்சு சரவா அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பபை தரும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset