செய்திகள் மலேசியா
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா:
நாட்டில் நில நிர்வாகத்தை நவீனமயமாக்குவதில் வெற்றிபெற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்பட வேண்டும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தேசிய நில மன்றத்தின் 81ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர்,
மக்கள், முதலீட்டாளர்களின் திருப்திக்காக நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உலக வங்கியின் மதிப்பீட்டின் அளவுகோல்களில் ஒன்று.
மேலும், தேசிய இலக்குகளை அடைவதில் நிலப்பரப்பின் அளவைப் பொறுத்து மட்டும் இல்லாமல்,
நிலப் பயன்பாட்டின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தையும் அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநில அரசின் சிறந்த நடைமுறைகள் பற்றிய அனைத்து கருத்துகளும் பெறப்பட்டன.
இவை அனைத்தும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 6:55 pm
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm