நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து 

புத்ராஜெயா:

நாட்டில் நில நிர்வாகத்தை நவீனமயமாக்குவதில் வெற்றிபெற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்பட வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசிய நில மன்றத்தின் 81ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற பிரதமர்,

மக்கள், முதலீட்டாளர்களின் திருப்திக்காக நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது உலக வங்கியின் மதிப்பீட்டின் அளவுகோல்களில் ஒன்று.

மேலும், தேசிய இலக்குகளை அடைவதில் நிலப்பரப்பின் அளவைப் பொறுத்து மட்டும் இல்லாமல், 

நிலப் பயன்பாட்டின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தையும் அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாநில அரசின் சிறந்த நடைமுறைகள் பற்றிய அனைத்து கருத்துகளும் பெறப்பட்டன.

இவை அனைத்தும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset