செய்திகள் மலேசியா
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு
புத்ராஜெயா:
லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது.
வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் 17 முதல் லெபனான் முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்களை வெடிபொருட்களாகப் பயன்படுத்துவது குறித்து மலேசியா மிகவும் கவலை கொண்டுள்ளது.
இதில் குறைந்தது 21 பேர் மரணமடைந்தனர். கிட்டத்தட்ட 3,300 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனானின் பாதுகாப்பு, நிலைத்தன்மை இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால்,
சைபர் தொடர்பான இந்தத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.
மலேசியா இந்த நெருக்கடியில் லெபனானுடன் உறுதியாக நிற்கிறது.
வளர்ந்து வரும் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படும்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், லெபனான் அரசாங்கம், மக்களுக்கும் மலேசியா தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதான வெளியுறவு அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 7:13 pm
நில நிர்வாகத்தை நவீனமயமாக்குமாறு மாநில அரசுக்கு பிரதமர் வலியுறுத்து
September 19, 2024, 5:31 pm
மக்கோத்தா இடைத்தேர்தல்: தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்படும்
September 19, 2024, 5:29 pm
குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து: 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்
September 19, 2024, 5:27 pm
காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு
September 19, 2024, 4:50 pm
MOU வரைவு அறிக்கைக்கு எதிர்கட்சியினர் பதில் அளிக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்
September 19, 2024, 4:48 pm
குளோபல் இக்வானின் 19 உறுப்பினர்களுக்கு 7 நாள் தடுப்பு காவல்
September 19, 2024, 4:47 pm
முக்கிய சாட்சிக்கு எதிராக லிம் குவான் எங் போலிசில் புகார் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
September 19, 2024, 4:44 pm