நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய வளாகத்தில் உள்ள தூணை மோதிய காரின் ஓட்டுநர் குடிபோதையில் இல்லை: போலிஸ்

ஈப்போ: 

ஆலய வளாகத்தில் உள்ள தூணை மோதி காரின் ஓட்டுநர் குடிபோதையில் இல்லை.பேரா போலிஸ் தலைவர் டத்தோ ஹசிசி மாட் ஹரிஸ் இதனை உறுதிப்படுத்தினார்.

ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆலய வளாகத்தில் இருந்த தூணை மோதி நின்றது.

இந்த சம்பவம் தஞ்சோங் ரம்புத்தானின் உள்ள ஆலயத்தில் நிகழ்ந்தது.இச்சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலானது.

சம்பந்தப்பட்ட ஆடவர் குடிபோதையில் இருந்தார் எனவும் தகவல்கள் வெளியானது.ஆனால் அவ்வாடவர் குடிபோதையில் இல்லை. மாறாக அந்த நபருக்கு நீரிழிவு நோய் காரணமாக இரத்தச் சர்க்கரைக் குறைவு அறிகுறிகள் இருந்தன.

மருத்துவ சோதனைகளின் அடிப்படையில், ஓட்டுநர் நீரிழிவு நோயாளி என பதிவு உறுதி செய்யப்பட்டது.

மேலும் சம்பவத்தின் போது அவர் இரத்தச் சர்க்கரைக் குறைவால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆகவே இந்த விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset