நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் அணியை மறுகட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது: ரொனால்டோ

லண்டன்: 

மென்செஸ்டர் யுனைடெட் அணி மீண்டும் பட்டம் வெல்லப் போட்டியிட வேண்டுமெனில், அடித்தளத்திலிருந்து அனைத்தையும் மறுகட்டமைக்க வேண்டியது அவசியம். 

நட்சத்திரக் கால்பந்து ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த பருவ இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணி எட்டாமிடத்தைப் பிடித்தபோதும், அக் குழுவைத் தான் இன்னும் நேசிப்பதாக அவர் கூறினார்.

மென்செஸ்டர் யுனைடெட் முன்னாள் ஆட்டக்காரர் ரியோ ஃபெர்டினாண்ட் வலையொலியில் பேசிய ரொனால்டோ, உள்கட்டமைப்பில் யுனைடெட் குழு முதலீடு செய்துவருவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

எனது பார்வையில், அக் குழு எல்லாவற்றையும் மீண்டும் கட்டமைக்க வேண்டும். அதற்குக் கூடுதல் காலம் தேவைப்படும்.

ஏனெனில் மென்செஸ்டர் யுனைடெட் இன்னும் உலகின் சிறந்த குழுக்களில் ஒன்றுதான். அதேநேரத்தில், அவர்கள் மாறவேண்டியதும் அவசியம். 

அது ஒன்றே வழி என்பதனை அவர்களும் புரிந்து வைத்துள்ளனர்

மேலும் மாற்றங்களின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset