நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்

லண்டன்:

கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பார்ன்ஸ்லே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 7-0 என்ற கோல் கணக்கில் பார்ன்ஸ்லே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மார்கஸ் ராஸ்போர்ட், அலெஜாண்ட்ரோ கர்னான்கோ, கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்தனர். மற்றொரு கோலை அந்தோனி அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கராபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் ஸ்டோக் சிட்டி, பிரின்போர்ட், சௌத்ஹாம்டன், பிரிஸ்டன் நோர்ட், கிறிஸ்டல் பேலஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset