
செய்திகள் இந்தியா
வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது
வாராணாசி:
வாராணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் எட்டாவா அருகே நடுவழியில் நின்றது.
தலைநகர் புதுதில்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் அதே நாளில் மதியம் 2.05 மணிக்கு வாராணாசியை சென்றடைகிறது.
இந்த நிலையில் இந்த ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை எட்டாவா அருகே நின்றது.
வந்தே பாரத் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராடியும் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் அப் பகுதியில் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்தது சரக்கு ரயில் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரயில் மீண்டும் பர்தானா ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm