
செய்திகள் இந்தியா
வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது
வாராணாசி:
வாராணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் எட்டாவா அருகே நடுவழியில் நின்றது.
தலைநகர் புதுதில்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் அதே நாளில் மதியம் 2.05 மணிக்கு வாராணாசியை சென்றடைகிறது.
இந்த நிலையில் இந்த ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை எட்டாவா அருகே நின்றது.
வந்தே பாரத் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராடியும் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் அப் பகுதியில் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்தது சரக்கு ரயில் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரயில் மீண்டும் பர்தானா ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 10:15 pm
ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு: புதுடில்லிக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் ஹ...
June 16, 2025, 9:55 pm
மோடியை போன்று பொய் சொல்லும் பிரதமரை பார்த்தில்லை: மல்லிகார்ஜுன கார்கே
June 16, 2025, 9:49 pm
ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம்
June 16, 2025, 4:06 pm
கேரளாவில் கனமழை; ஒரே நாளில் 4 பேர் பலி
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 8:31 pm
காஸா போர் நிறுத்தத் தீர்மானத்தை புறக்கணித்து இந்திய வெளியறவு கொள்கையை மோடி அரசு ச...
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm