செய்திகள் மலேசியா
கூலிம் நகரில் வெள்ளம்: தற்காலிக துயர்துடைப்பு மையம் திறப்பு
அலோர் ஸ்டார்:
கெடா மாநிலத்தின் கூலிம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை தங்க வைக்க ஒரேஒரு தற்காலிக துயர்துடைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கெடா மாநில பொது தற்காப்பு துறை தெரிவித்தது.
நேற்றிரவு சம்பந்தப்பட்ட தற்காலிக துயர்துடைப்பு மையம் திறக்கப்பட்டது. கம்போங் செலுவாங் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்க வைக்கப்பட்டவர்களில் 17 பேர் பெரியவர்கள் என்றும் 15 சிறுவர்கள் என்றும் அவர்கள் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தனர்.
நேற்றிரவு பல மணி நேரங்களுக்குப் பெய்த கனமழையினால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அதன் நீர் மட்டமும் உயர்ந்ததாக அங்குள்ள பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
- தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 10:42 pm
பேரா மாநில இந்திய முஸ்லிம் இயக்கத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது
September 16, 2024, 9:14 pm
1 லட்சத்திற்கும் அதிகமான மலேசிய சுற்றுப்பயணிகள் தென் தாய்லாந்திற்கு வருகை புரிந்து விடுமுறையைக் கழித்தனர்
September 16, 2024, 9:12 pm
ஆறாம் ஆண்டு, படிவம் மூன்றுக்கான தேர்வு கொள்கை வரைவு: அமைச்சரவை பார்வைக்குக் கொண்டு செல்லப்படும்
September 16, 2024, 8:11 pm
தேமு வேட்பாளர் சையத் ஹுசைனை வெற்றிப்பெற செய்வதே எங்களின் இலக்காகும்: வீ கா சியோங்
September 16, 2024, 8:09 pm
20 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆடவர் மரணம்: பெட்டாலிங் ஜெயாவில் பரபரப்பு
September 16, 2024, 6:02 pm
துணையமைச்சர்கள் சரஸ்வதி, குலசேகரன் ஆகியோருடன் இந்திய இணை அமைச்சர் பேச்சு வார்த்தை
September 16, 2024, 5:42 pm
பகாங்கில் சமயங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட 6 கும்பல்கள் செயல்படுகின்றன: பகாங் சுல்தான்
September 16, 2024, 5:25 pm
RXZ மோட்டார் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு விபத்துகளில் மரணமடைந்தனர்
September 16, 2024, 5:17 pm