நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலிம் நகரில் வெள்ளம்: தற்காலிக துயர்துடைப்பு மையம் திறப்பு 

அலோர் ஸ்டார்: 

கெடா மாநிலத்தின் கூலிம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை தங்க வைக்க ஒரேஒரு தற்காலிக துயர்துடைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கெடா மாநில பொது தற்காப்பு துறை தெரிவித்தது. 

நேற்றிரவு சம்பந்தப்பட்ட தற்காலிக துயர்துடைப்பு மையம் திறக்கப்பட்டது. கம்போங் செலுவாங் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தங்க வைக்கப்பட்டவர்களில் 17 பேர் பெரியவர்கள் என்றும் 15 சிறுவர்கள் என்றும் அவர்கள் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக தெரிவித்தனர். 

நேற்றிரவு பல மணி நேரங்களுக்குப் பெய்த கனமழையினால் அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அதன் நீர் மட்டமும் உயர்ந்ததாக அங்குள்ள பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

- தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset