நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதையே ஒற்றுமை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதையே ஒற்றுமை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இந்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சிறந்தவற்றை வழங்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. அவ்வகையில் மலேசியர்களுக்குத் தரமான வாழ்க்கை முறையை ஏற்படுத்தி கொடுக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார். 

நாட்டு மக்களுக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தனது தலைமையிலான மடானி அரசாங்கம் என்று உறுதுணையாக இருக்கும் என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். 

மடானி அரசாங்கத்தில் நாட்டு மக்களும் அடிப்படை வசதிகளும் முதன்மை இலக்காக கொண்டு புதிய யுக்திகள் முன்னெடுக்கப்படும் என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

- தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset