நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆற்றின் தடுப்பு சரிந்து விழுந்ததால் கட்டுமானப் பணிகளை கமுடா நிறுத்தியது

பூச்சோங்:

ஆற்றின் தடுப்பு சரிந்து விழுந்ததால் கட்டுமானப் பணிகளை கமுடா நிறுவனம் நிறுத்தியது.

பூச்சோங் தாமான் மாஸ் ராசாவ் ஆற்றின் கரையோரம் நேற்று பிற்பகல் இடிந்து விழுந்தது.

இதனால் கட்டுமானப் பகுதியின் முன்புறத்தில் ஆற்றின் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

இதனால் தண்ணீர் கட்டுமானத் தளத்தை நிரம்பியது.

நிலைமையை மதிப்பிடுவதற்கும் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கும் அனைத்து கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதனை கமுடா பெர்ஹாட் நிறுவனம் ஓர்  அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset