நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் திட்டங்கள் மகத்தானது: பிரபாகரன்

கோலாலம்பூர்:

இந்திய மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் திட்டங்கள் மகத்தானது.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரிக்பீல்ட்ஸ் சென்டருக்கு முதல் முறையாக வருகை புரிகிறேன்.

மாணவர்கள்தான் படிக்க வந்திருக்கிறார்கள் என்றால் அதிகமாக பெற்றோர்கள் இங்கு கூடியிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

பிள்ளைகள் கல்வியில் சாதிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாக உள்ளது.

அதன் அடிப்படையில்தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் இன்றைய கல்வி ஜெயம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

பள்ளிப் பாடத் திட்டம், அதில் உள்ள சவால்கள் உட்பட பல விளக்கங்கள் இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்வுகளை ஸ்ரீ முருகன் நிலையம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

இத்திட்டங்களுக்கு அரசாங்கம், மித்ராவின் வாயிலாக உதவிகள் கிடைப்பதை நான் உறுதி செய்வேன் என்று பிரபாகரன் கூறினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset