நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆடம்பரக் காரில் வந்து வீட்டுப் பணிப் பெண்கள் திட்டத்தில் மோசடி; 17 பேர் 150,000 ரிங்கிட்டை இழந்தனர்: டத்தோ டாக்டர் கலைவாணர்

கோலாலம்பூர்:

வீட்டுப் பணிப் பெண்கள் திட்ட மோசடியில் 17 பேர் கிட்டத்தட்ட 150,000 ரிங்கிட்டை இழந்துள்ளனர்.

அரசு சாரா அமைப்பான நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

இம் மோசடி நடவடிக்கையில் தொடர்புடைய சந்தேக நபர் டிக் டாக் வாயிலாக வீட்டுப் பணிப் பெண் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்பவர்கள் வீட்டிற்கு ஆடம்பர கார்களில் செல்லும் அவர் பல ஆசை வார்த்தைகளை கூறுகிறார்.

இதை நம்பி பணிப் பெண்ணுக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் சராசரி 10,000 ரிங்கிட்டை கட்டணமாக வசூலிக்கிறார்.

அதன் பின் வீட்டிற்கு பணிப் பெண் அனுப்பப்பட்டாலும் அவர் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் ஓடி விடுகிறார்.

அதற்கு பின் மாற்று பணிப் பெண்ணும் கிடைப்பது இல்லை. பணமும் திருப்பி கிடைப்பது இல்லை

பணத்தைக் கேட்டாலும் எந்தவொரு பதிலும் இல்லை. இதன் அடிப்படையில் தான் பாதிக்கப்பட்ட அனைவரும் போலிசில் புகார் செய்துள்ளனர்.

இவர்களின் புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கைகள் எடுப்பது இல்லை என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

வீட்டுப் பணி பெண்கள் என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆடவர் ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.

ஆகவே இவ்விவகாரத்தை போலிசார் விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset