செய்திகள் மலேசியா
ஐபிஎப் என்றென்றும் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும்: பேராக் மாநிலத் தலைவர் வி.மாணிக்கம்
ஈப்போ:
ஐபிஎப் கட்சி கடந்த 32 ஆண்டுகளாக இந்நாட்டில் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அன்று முதல் இன்று வரை இக் கட்சி தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவு வழங்கி வருகிறது. இந்த ஆதரவு என்றென்றும் தொடர்ந்து வழங்கப்படும் என்பது உறுதியான ஒன்றாகும் என்று இங்குள்ள தம்புன் தொகுதியின் ஐபிஎப் கட்சியின் குடும்ப தின விழாவில் கலந்துக்கொண்ட போது பேராக் மாநில ஐபிஎப் கட்சியின் தலைவர் வி.மாணிக்கம் கூறினார்.
தேசிய முன்னணி எத்தகைய பிரச்சினைகள் எதிர்நோக்கிய போதும் , ஐபிஎப் கட்சி சளைக்காமல் இன்னமும் தேசிய முன்னணிக்கு தேர்தல் காலங்களிலும் இதர காலகட்டத்திலும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐபிஎப் கட்சியினர் குறிப்பாக தொகுதிகள் மற்றும் மாநில அளவில் மக்களுக்கு தங்களால் இயன்றளவு சேவைகளை செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தொகுதிகள் குடும்ப தின விழா கொண்டாட்டாத்தை ஏற்பாடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தம்புன் ஐபிப் தொகுதியினர் இந்த குடும்ப தின விழாவில் உரி அடித்தல், வர்ணம் தீட்டும் போட்டி, கோலம் போடுதல், ஆப்பிள் பழம் சாப்பிடுதல் போன்ற விளையாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.
இத்தகைய விளையாட்டுகள் மூலம் குடும்பங்கள ஒன்று சேர்வது மட்டுமல்லாமல் செயல்படும் இந்திய பாரம்பரிய விளையாட்டுகளின் நினைவுகூரவும் முடியும் என்று அவர் பாராட்டினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினர் சிம்மோர் மெட்டல் நிறுவன தொழிலதிபர் எஸ்.வாசு, மலேசிய ஐபிஎப் கட்சியின் துணைப் பொருளாளரும் பினாங்கு மாநில தலைவருமான டாக்டர் குமரேசன்.
இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த தம்புன் தொகுதி ஐபிஎப் தலைவர் இராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 3:12 pm
மஇகாவின் புதிய தலைமையகத்தின் மாதிரி கட்டடத்தை துணைப் பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்தார்
September 15, 2024, 1:17 pm
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையிலான ரசீது: போலிசார் விசாரணையை தொடங்கினர்
September 15, 2024, 11:50 am
சில குழுக்களின் சுயநலத்தால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை: பிரதமர் அன்வார்
September 15, 2024, 11:08 am
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
September 14, 2024, 11:28 pm
முஸ்லிம் அல்லாதவர்கள் இனி பாஸ் கட்சியில் உறுப்பினர்களாகலாம்
September 14, 2024, 11:24 pm
ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க பாடுபடுவோம்: டத்தோ ஆரோன் அகோ
September 14, 2024, 10:12 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு அக். 6ஆம் தேதி நடைபெறும்
September 14, 2024, 10:09 pm
யூபிஎம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமான பணிக்கு 50,000 ரிங்கிட் நிதி: இயோ பீ இன் வழங்கினார்
September 14, 2024, 12:39 pm