செய்திகள் மலேசியா
பணியிடங்களில் நிகழும் விபத்துகளுக்கு RM718 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது: ஸ்டிவன் சிம்
புத்ரா ஜெயா:
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை பணியிடங்களில் நிகழும் விபத்துகளுக்கு சமூக பாதுகாப்பு அமைப்பு, Socso மூலம் RM718 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
2023-ஆம் ஆண்டில் பணியிடங்களிலும் நிகழும் விபத்துகளுக்கான திட்டத்தின் கீழ் மொத்த இழப்பீடு RM1.39 பில்லியனைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி பணியிடங்களில் இதுவரை 41,278 விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
பணியிடங்களில் நிகழும் விபத்துகளால் இதுவரை 515 பேர் மரணமடைந்துள்ளனர்.
மலேசியாவிலுள்ள சுமார் 10 மில்லியன் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவரது அமைச்சகமும் Socso-வும் கடமைப்பட்டிருப்பதாக ஸ்டிவன் சிம் கூறினார்.
ஆண்டுதோறும் 2,000 முதலாளிகள் மற்றும் 20,000 ஊழியர்களை உள்ளடக்கிய 500 க்கும் மேற்பட்ட விபத்து தடுப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 3:12 pm
மஇகாவின் புதிய தலைமையகத்தின் மாதிரி கட்டடத்தை துணைப் பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்தார்
September 15, 2024, 1:17 pm
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையிலான ரசீது: போலிசார் விசாரணையை தொடங்கினர்
September 15, 2024, 11:50 am
சில குழுக்களின் சுயநலத்தால் மலேசியாவில் இஸ்லாம் சரியான பாதையில் இல்லை: பிரதமர் அன்வார்
September 15, 2024, 11:08 am
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
September 14, 2024, 11:28 pm
முஸ்லிம் அல்லாதவர்கள் இனி பாஸ் கட்சியில் உறுப்பினர்களாகலாம்
September 14, 2024, 11:24 pm
ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலைத்திருக்க பாடுபடுவோம்: டத்தோ ஆரோன் அகோ
September 14, 2024, 10:12 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு அக். 6ஆம் தேதி நடைபெறும்
September 14, 2024, 10:09 pm
யூபிஎம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கட்டுமான பணிக்கு 50,000 ரிங்கிட் நிதி: இயோ பீ இன் வழங்கினார்
September 14, 2024, 12:39 pm